» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மீன்வளக் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் - ஆட்சியர் துவக்கி வைத்தார்
புதன் 9, நவம்பர் 2022 9:13:13 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மீன்வள மையம் மற்றும் உயர் மேலாண்மை கண்டுபிடிப்பு திட்டம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கத்தினை துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மீன்வள மையம் மற்றும் உயர் மேலாண்மை கண்டுபிடிப்பு திட்டம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கத்தினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் துணை வேந்தர் ஜி.சுகுமார் முன்னிலையில் இன்று துவக்கி வைத்து தெரிவித்ததாவது: மாணவ, மாணவிகள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை இணைக்க வேண்டும். மேலும் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் தங்களது ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும். வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று மனு அளிக்க இயலாதவர்கள் இணையதளம் மூலமாகவும், செயலி மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்திட விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
தூத்துக்குடி மாவட்டம் 2 விஷயங்களுக்கு பெயர் பெற்றது. ஒன்று கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றொன்று மீன்வளக் கல்லூரி ஆகும். நமது மாவட்டத்தில் உள்ள கொற்கையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்துள்ளார்கள். நாம் 7000 ஆண்டுகள் பழமையானவர்கள். அரசு நீட்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்களை பயன்படுத்தி நீங்கள் கல்லூரி முடித்தவுடன் புதிய தொழில் முனைவோராக உருவாகி பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும். நமது மாவட்டத்தில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனவே நம்பிக்கையை எப்பொழுதுமே இழக்க வேண்டாம் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் முதல்வர் முனைவர்.அகிலன், சென்னை தொழில் முனைவோர் மேம்பாட்டு கண்டுபிடிப்பு நிறுவனம் கூடுதல் இயக்குனர் முத்துராமன், கணேசன் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி கீதா மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆண்டு விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
சனி 4, பிப்ரவரி 2023 4:25:03 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இரத்த தான முகாம்
வெள்ளி 3, பிப்ரவரி 2023 11:30:59 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்க ராஜ்ஜிய புரஷ்கார் தேர்வு முகாம்
வியாழன் 2, பிப்ரவரி 2023 12:06:42 PM (IST)
_1674889708.jpg)
கோவில்பட்டியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி
சனி 28, ஜனவரி 2023 12:38:35 PM (IST)

அனைவருக்கும் நாட்டுப்பற்று அவசியம்: குடியரசு தினவிழாவில் தொழிலதிபர் நெகிழ்ச்சி!
வெள்ளி 27, ஜனவரி 2023 3:31:39 PM (IST)

குளத்தூர் டி. எம். எம் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு
வெள்ளி 27, ஜனவரி 2023 3:26:22 PM (IST)
