» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
வியாழன் 3, நவம்பர் 2022 11:10:22 AM (IST)
நாசரேத் புனித லூக்கா செவியியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது.
நாசரேத் புனித லூக்கா செவியியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன் தலைமை தாங்கினார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.டி.கே. ஜெயசீலன் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு அறிவுரை கூறினார். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் சோபியா செல்வரானி கல்லூரி விதிகள் மற்றும் விதிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். இறுதியாக லிதியா நன்றி கூறினார்.