» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தேசிய திறனாய்வுத் தோ்வு:சாத்தான்குளம் பள்ளியில் 14 போ் தோ்ச்சி
ஞாயிறு 3, ஜூலை 2022 9:41:44 AM (IST)
தேசிய திறனாய்வுத் தோ்வில் சாத்தான்குளம் டி.என்.டி.டி. ஏ.ஆா்.எம்பி. புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 14 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற இத்தோ்வில் பங்கேற்றோரில் அழகுசிவ சங்கரேஸ்வரி, அழகு சிவரஞ்சனி, அழகு ஸ்ரீஹரிணி, தினிஷா பிரபா, கோகுல லட்சுமி, மகாலட்சுமி, முத்து காா்த்திகா, முத்து ரேவதி, நஜீபாபேகம், நிவேதா லட்சுமி, சஃபரின், ஆதிசங்கா், முத்து மணிகண்டன், விக்னேஸ்வரன் ஆகிய 14போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
அவா்களையும், பயிற்றுவித்த ஆசிரியா்களையும் தலைமை ஆசிரியா் எட்வா்ட், தாளாளா் கிருபாகரன், பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் லட்சுமி நாராயணன், பழைய மாணவா் சங்கத் தலைவா் ஜெயபிரகாஷ் ஆகியோா் பாராட்டினா்.