» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி சக்தி வித்யாலயாவில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
திங்கள் 27, ஜூன் 2022 4:40:07 PM (IST)
தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் சார்பில் உலக போதைபொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளரும் முதல்வருமான ஆ.ஜெயாசண்முகம் தலைமை வகித்து மாணவ, மாணவியர்களிடம் போதை பொருளால் வீடுகளில் அமைதி குலைந்து சந்தோஷம் குறைவதையும், பொருளாதார சீர்கேடு நடப்பதையும் உடல்நலம் பாதிக்கப்படுவதையும் விளக்கி போதை பொருளை பயன்படுத்தாத புதிய சமுதாயத்தை நாம் உருவாக்க வேபண்டும் என்று உறுதி கூறுவோம் என்று மாணவ, மாணவிகளை உறுதிமொழி கூறச் செய்தார்.
அதன்பின் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் "போதை போதை என்று அலைபவர் குடும்பம் கெடும்”, "போதையற்ற நல்வழிப்பாதையை உருவாக்குவோம்”, "புகையிலை திண்ணாதே; புற்றுநோய்க்கு உள்ளாகாதே” போன்ற பல பதாகைகளை கையில் ஏந்தி மாணவ, மாணவிகள் காமராஜ்நகர், மூன்றாம் மைல் ஆகிய பகுதியிலுள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் ஆசிரியைகளும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணைமுதல்வர் ரூபிரத்ன பாக்கியம் செய்திருந்தார்.