» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட வருவாய் துறையில் 25 பணியிடங்கள்

வெள்ளி 14, மே 2021 7:38:40 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை: தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் ஆட்சியர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் மசால்ஜி 10, இரவுக் காவலர் 12, தோட்டக்காரர் 1, துப்புரவு பணியாளர் 2 ஆகிய நிலையில் மொத்தம் காலியாக உள்ள 25 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தகுதியான நபர்களை அவுட் சோர்சிங் மூலம் அளிக்க, அரசு விதிமுறைகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட, அரசின் அங்கீகாரம் பெற்ற தகுதி வாய்ந்த முகமை (ஏஜென்சி)கள், முத்திரையிடப்பட்ட கவரில் உரிய விண்ணப்பத்தை முகமை அங்கீகார நகல், ஊதிய ஒப்பந்த புள்ளி விவரங்களுடன் 31.05.2021-க்கு முன்பாக ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.

கவரின் மேல்புறம் மசால்ஜி / இரவுக்காவலர் ஆவுட் சோர்சிங் விண்ணப்பம் என குறிப்பிட வேண்டும். 31.05.2021-க்கு பின்னர் வரப்பெறும் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஒப்பந்த தாரர்கள் முன்னிலையில் 04.06.2021 அன்று ஒப்பந்த புள்ளி கள் திறக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory