» சினிமா » செய்திகள்

விஷ்ணு விஷால் படத்திற்கு மலேசியா, குவைத், கத்தார் நாடுகளில் தடை!

வெள்ளி 11, பிப்ரவரி 2022 4:19:32 PM (IST)



விஷ்ணு விஷால் நடித்துள்ள எஃப்ஐஆர் படத்திற்கு மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எஃப்ஐஆர் திரைப்படம் இன்று (பிப்ரவரி 11) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மனு ஆனந்த் இயக்கியுள்ளார். கௌதம் மேனன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். 

இந்நிலையில் இந்தப் படம் குவைத், மலேசியா, கத்தார் ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்த கருத்துகள் இருப்பதால் இந்தப் படம் தடை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory