» சினிமா » செய்திகள்
பண்ணை வீட்டில் தங்கியிருந்த நடிகர் சல்மான் கானை பாம்பு பாம்பு கடித்தது
திங்கள் 27, டிசம்பர் 2021 12:34:14 PM (IST)
பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது பாம்பு கடித்த நிலையில், நடிகர் சல்மான் கான் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் சல்மான் கான் நாளை தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதற்காக அவர் மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டம், பன்வெல்லில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு செடிகளுக்கு இடையே இருந்த பாம்பு ஒன்று சல்மான் கானை கடித்தது. இதையடுத்து அவர் கமோதில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்லப்பட்டார். சல்மான் கானை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை கடித்த பாம்பு விஷமில்லாதது என தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.