» சினிமா » செய்திகள்

நடிகர் வடிவேலுக்கு கரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி!

வெள்ளி 24, டிசம்பர் 2021 4:10:49 PM (IST)

லண்டன் சென்று திரும்பிய நடிகர் வடிவேலுக்கு கரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகனாக 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், படத்தின் பாடல் கம்போசிங்கிற்காக படக்குழுவினருடன் வடிவேலு லண்டன் சென்றிருந்தார்.

இந்நிலையில், லண்டனிலிருந்து சென்னை திரும்பி வடிவேலுக்கு லேசாக அறிகுறிகள் இருந்ததை அடுத்து மேற்கொண்ட சோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிகிச்சைக்காக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory