» சினிமா » செய்திகள்

வெள்ள நிவாரணம் : பிரபாஸ் ரூ.1 கோடி நிதியுதவி

புதன் 8, டிசம்பர் 2021 5:36:03 PM (IST)

ஆந்திர வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நடிகர் பிரபாஸ் ரூ.1 கோடி நிதியுதவி செய்துள்ளார்.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் ஆந்திராவின் நெல்லூர், சித்தூர், கடப்பா உள்ளிட்ட மாவட்டங்களில் சமீபத்தில் கடுமையான மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழந்தது. கனமழை மற்றும் வெள்ளத்துக்கு இதுவரை 40க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு உள்ளிட்டோர் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் பிரபாஸ் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி நிதியுதவி செய்துள்ளார். பிரபாஸுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. தற்போது ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள 'ராதே ஷ்யாம்' படத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாகவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory