» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமனம்!
திங்கள் 8, ஜூலை 2024 5:25:07 PM (IST)
இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியின் பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தேர்வுக் குழுவில் சனத் ஜெயசூர்யா ஏற்கனவே கடந்த காலத்தில் இருந்துள்ளார்.
அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணியின் பேட்டிங் ஆலோசகராக சனத் ஜெயசூர்யா செயல்பட்டார். சனத் ஜெயசூர்யா இலங்கை அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,973 ரன்கள் குவித்துள்ளார். 445 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 13,430 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 28 சதங்கள் மற்றும் 68 அரைசதங்கள் அடங்கும். கடந்த 1996 ஆம் ஆண்டில் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியில் அங்கம் வகித்துள்ளார்.
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த கிறிஸ் சில்வர்வுட் அண்மையில் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லையெனில் வெற்றி பெறுவது கடினம் : தோனி விரக்தி!
சனி 26, ஏப்ரல் 2025 11:21:50 AM (IST)

ஐபிஎல் 2025 : பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ள அணிகள்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 11:52:52 AM (IST)

அவுட் ஆகாமல் ஆடுகளத்தை விட்டு வெளியேறிய இஷான் : வீரேந்தர் சேவாக் விமர்சனம்
வியாழன் 24, ஏப்ரல் 2025 5:08:54 PM (IST)

டிரன்ட் பவுல்ட், ரோகித் சர்மா அசத்தல் : ஐதராபாத் அணியை வீழ்த்தியது மும்பை!
வியாழன் 24, ஏப்ரல் 2025 11:46:57 AM (IST)

ஐபிஎல் கிரிக்கெட்டில் விரைவாக 5ஆயிரம் ரன்கள் : கே.எல்.ராகுல் புதிய சாதனை
புதன் 23, ஏப்ரல் 2025 12:53:14 PM (IST)

நடப்பு சீசனில் சிஎஸ்கே கம்பேக் கொடுக்க வாய்ப்பில்லை: அம்பாதி ராயுடு கருத்து
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 4:35:00 PM (IST)
