» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

எனது கடைசி போட்டி சென்னையில் நடைபெற வேண்டும்: தோனி விருப்பம்

புதன் 6, அக்டோபர் 2021 5:33:04 PM (IST)

தன்னுடைய கடைசி ஐ.பி.எல். போட்டியானது சென்னை மைதானத்தில் நடைபெற வேண்டும் என தோனி விருப்பம் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, நேற்று ஆன்லைன் வாயிலாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, தனது ஓய்வு முடிவை பற்றி  மனம் திறந்தார். தன்னுடைய பிரிவு உபசார போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சென்னை மைதானத்தில் ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெற வேண்டும் என  தனது விருப்பத்தை தெரிவித்தார். அந்த வாய்ப்பு தனக்கு கிட்டும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். 

இதன் மூலம் அவர் ஐ.பி.எல்.லின் மற்றொரு சீசனில் விளையாடுவார் என்று தெரிகிறது. அடுத்த ஆண்டு  நடைபெறும் ஐ.பி.எல். தொடரானது மெகா ஏலத்தின் மூலம் அணியிலுள்ள வீரர்கள் அனைவரும் மாற்றியமைக்கப்படுவார்கள். இத்தகைய சூழலில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பிராட் ஹாக், டேல் ஸ்டெய்ன் மற்றும் பலர் நடப்பு ஐ.பி.எல். தொடரே  தோனியின் கடைசி போட்டியாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory