» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிவாலய ஓட்டம்: கனிமவள லாரிகளுக்கு 2 நாட்கள் தடை - எஸ்பி ஸ்டாலின் உத்தரவு!

வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:38:17 PM (IST)

சிவாலய ஓட்டத்தையொட்டி பக்தர்களின் பாதுகாப்பை முன்னிட்டு, பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் கனிமவள டாரஸ் வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிவாலய ஓட்டத்தையொட்டி பக்தர்களின் பாதுகாப்பை முன்னிட்டு, பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் கனிமவள டாரஸ் வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ஸ்டாலின் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பக்தர்களின் நலன் கருதி 14, 15 ஆகிய தேதிகளில் கனிமவள கனரக வாகனங்கள் இயங்க அனுமதி இல்லை. தடையை மீறி மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory