» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உண்டியலை உடைத்தபோது கருவறையில் இருந்து சத்தம் கேட்டதால் கொள்ளையன் ஓட்டம்!!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:30:20 AM (IST)
திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது கருவறையில் இருந்து சத்தம் கேட்டதால் தப்பி ஓடியதாக கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சியில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவில் குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்களில் 2-வது சிவாலயமாக விளங்குகிறது. இக்கோவிலில் கடந்த 6-ந் தேதி மாலையில் தலைமை அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி கோவில் நடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை அவர் கோவிலுக்கு வந்தார்.
அப்போது கோவிலில் உள்ள உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. ஆனால் அதில் இருந்த காணிக்கை திருட்டு போகவில்லை. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்போில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலையில் மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவர் மீது சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வெள்ளாங்கோடு சரல் விளையை சேர்ந்த மனோஜ் (வயது 29) என்பதும், திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் உண்டியல் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் கோவில் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து இரும்பு கம்பியால் உண்டியல் பூட்டை உடைத்துள்ளார்.
அப்போது கருவறை பகுதியில் இருந்து ஏதோ சத்தம் கேட்டதால் பயந்துபோன அவர் காணிக்கை பணத்தை எடுக்காமல் தப்பி ஓடியதாகவும், மது குடிக்க பணம் இல்லாததால் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து மனோஜை போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை: கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை!
புதன் 10, டிசம்பர் 2025 8:42:41 AM (IST)

தூத்துக்குடியிலிருந்து நிலக்கரி ஏற்றி வந்த லாரி விபத்து: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 7:42:11 AM (IST)

திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:29:20 PM (IST)

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்: டிச.20ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:07:19 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள்: டிச.23க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:00:22 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கொடிநாள் வசூல்: ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 3:46:25 PM (IST)










