» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5பேர் கைது 1.100 கிலோ கஞ்சா பறிமுதல்!
திங்கள் 19, மே 2025 5:11:25 PM (IST)

ஈத்தாமொழி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
குமரி மாவட்டத்தில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் கஞ்சா, காவல்துறையினர் குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக ஈத்தாமொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் 1.100 கிலோ கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஈத்தாமொழி தர்மபுரம் பகுதியை சேர்ந்த ராஜகுமார் மகன் அபிராம் குமார்(20), மங்காவிளை பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் கபின்(25), கோட்டார் வடலிவிளை பகுதியை சேர்ந்த மணி மகன் சுரேஷ்(29), இடலாக்குடி அச்சன் கிணறு தெருவை சேர்ந்த மாஹின் அபூபக்கர் மகன் முகமது ஷாபி(31), இரணியல் சுயம்பு மகன் அபினேஷ்(29) ஆகிய 5பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் 6,504 கடல் ஆமை முட்டைகள் சேகரிப்பு: 1,448 குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
திங்கள் 9, மார்ச் 2026 11:18:05 AM (IST)

திமுக ஒரு குடும்பத்திற்காக ஆட்சி நடத்துகிறது : ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
ஞாயிறு 8, மார்ச் 2026 8:45:55 PM (IST)

சட்டமன்றத் தேர்தல்: மார்ச் 10 முதல் த.வெ.க வேட்பாளர்களுடன் விஜய் நேர்காணல்!
ஞாயிறு 8, மார்ச் 2026 8:22:58 PM (IST)

தமிழகத்தில் இருந்து விடைபெறும் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
சனி 7, மார்ச் 2026 5:37:23 PM (IST)

வீடுபுகுந்து காவலரே பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் : டிடிவி தினகரன் கண்டனம்!
சனி 7, மார்ச் 2026 5:11:27 PM (IST)

விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால் வீட்டில் அனுமதி மறுப்பு: விஜய் மீது சங்கீதா புதிய புகார்
சனி 7, மார்ச் 2026 4:36:03 PM (IST)







