» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குளியலறையில் ரகசிய கேமரா: இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டிய ராணுவ கைது!

திங்கள் 19, மே 2025 12:43:02 PM (IST)

குமரி மாவட்டத்தில் வீட்டு குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தி இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண் திருமணமாகி கணவன், இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது உறவினரான வெள்ளிச்சந்தை அருகே ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மது ராஜா (35). இவர் மிசோரம் மாநிலத்தில் ராணுவ ஸ்டோர் கீப்பராக பணிபுரிந்து வருகிறார். 

விடுமுறையில் மது ராஜா வரும்போதெல்லாம் அந்த பெண்ணின் வீட்டுக்கு செல்வது வழக்கம். 2003-ல் அந்த பெண் புதிதாக வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்தினார். இதற்கு அழைத்ததன் பேரில் சென்ற மது ராஜா புதிய வீட்டில் உள்ள குளியல் அறையில் ரகசிய கேமரா ஒன்றை பொருத்தினார். பின் அவர் மிசோரம் மாநிலத்திற்கு பணிக்கு சென்றார்.

அங்கு இருந்தபடி அந்த பெண்ணின் வீட்டு குளியலறையில் இருந்த கேமரா மூலம் அலைபேசியில் அவர் குளிப்பதை பார்த்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் மது ராஜா சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அந்த பெண்ணிடம் அந்த படங்களை காட்டி ஆசைக்கு இணங்குமாறு கூறினார். அதிர்ச்சி அடைந்த பெண் மது ராஜா மீது ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார்.

போலீஸ் விசாரணையில் மது ராஜா ரகசியமாக கேமரா பொருத்தியது தெரிந்தது. மது ராஜாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory