» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து உரிய நேரத்தில் அரசு முடிவடுக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 12:51:37 PM (IST)
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் அரசு முடிவு எடுக்கும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இது குறித்து சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது; அரசு ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கும் முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருப்பதாகக் கூறினார். அரசு ஊழியர்களுடைய நலனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார்.
அந்த வகையில் ஊழியர்களுடைய கோரிக்கைகள் அரசு மிகுந்த கவனத்தோடு பரிசிலீத்து வருகிறது. நிதிநிலை அறிக்கையில் கூட அரசு ஊழியர்களுக்கான தேவையான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறேன். தொடர்ந்து அவர்களுக்கு கோரிக்கைகள் இருந்து வருகின்றன. பழைய ஓய்வூதிய திட்டத்தை பொறுத்தவரை அரசு ஒரு குழுவை நியமித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவுக்கான கால வரையறைகள் தரப்பட்டிருக்கிறது. அந்த குழுவை பொறுத்தவரை பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் பல கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதனை முதலமைச்சரிடம் கலந்து பேசி கோரிக்கைகளை அரசு மிகுந்த கவனத்தில் எடுத்து கொண்டு உள்ளது. அவர்கள் கேட்டிருக்க கூடிய கோரிக்கைகளை குழுவிடம் விவாதித்து உரிய நேரத்தில் சரியான முடிவை அரசு மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
XxxxxApr 26, 2025 - 10:37:46 PM | Posted IP 162.1*****
வடை சுடும் போட்டியில் வெற்றி பெறுவது அன்பில் பொய் மொழியா? அல்லது கவரிங் தென்னரசு வா? கடும் போட்டி
மேலும் தொடரும் செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 12, மே 2025 4:35:02 PM (IST)

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.எஸ். தங்கபாண்டியன் மறைவு: அமைச்சர் அஞ்சலி!
திங்கள் 12, மே 2025 3:31:32 PM (IST)

கன்னியாகுமரி - ஹவுரா தினசரி ரயிலாக இயக்க வேண்டும் : பயணிகள் கோரிக்கை
திங்கள் 12, மே 2025 3:12:51 PM (IST)

பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு : மாநில தலைவர் வலியுறுத்தல்
திங்கள் 12, மே 2025 12:50:38 PM (IST)

கள்ளழகர் திருவிழாவில் புனிதமான பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம் : ஆளுநர் ரவி வாழ்த்து!
திங்கள் 12, மே 2025 12:34:52 PM (IST)

பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திங்கள் 12, மே 2025 10:27:28 AM (IST)

தீமுகApr 29, 2025 - 06:01:36 AM | Posted IP 104.2*****