» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை மாவட்ட முதல் பெண் தீயணைப்பு அதிகாரி பதவி ஏற்பு: அலுவலர்கள், வீரர்கள் வாழ்த்து
புதன் 19, மார்ச் 2025 8:33:23 AM (IST)
நெல்லை மாவட்ட முதல் பெண் தீயணைப்பு அலுவலராக பானுபிரியா பதவி ஏற்றுக் கொண்டார்.

பானுபிரியா, விருதுநகர் மாவட்டம் சிவகாசி பொறியியல் கல்லூரியில் பி.இ. இளநிலை பட்டப்படிப்பும், நெல்லை மருதகுளம் பொறியியல் கல்லூரியில் எம்.இ. முதுநிலை பட்டப்படிப்பும் படித்து உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று தீயணைப்பு துறை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் பயிற்சி முடித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தென்காசியில் பணிபுரிந்த நிலையில் நெல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இவர் சமீபத்தில் நடந்த குற்றாலம் வெள்ளப்பெருக்கின்போது வெள்ளத்தில் சிக்கியவர்களை துரிதமாக மீட்டது உள்ளிட்ட பல்வேறு சிறப்பான பணியில் களத்தில் இறங்கி உள்ளார். மேலும் இவர் நெல்லை மாவட்டத்தின் முதல் பெண் தீயணைப்பு மாவட்ட அலுவலர் என்ற பெருமையை பெறுகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நடிகர் நெப்போலியன் மகன் குறித்து அவதூறு: நெல்லை எஸ்பி அலுவலகத்தில் புகார்!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:50:12 AM (IST)

திமுக கூட்டணிக்கு பாமக வந்தால், அதிமுக கூட்டணிக்கு விசிக செல்லுமா? : முதல்வர் விளக்கம்
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:51:50 AM (IST)

பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரே தொடர்கிறார்: ஆளுநர் மாளிகை விளக்கம்!
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:48:53 AM (IST)

நெல்லை அருகே ஒரே குடும்பத்தில் 6 பேர் தற்கொலை முயற்சி : போலீஸ் விசாரணை!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 7:09:14 PM (IST)

குடிநீரில் கழிவுநீர் கலப்பு: 3 பேர் சாவுக்கு தி.மு.க. அரசே பொறுப்பு - இ.பி.எஸ். அறிக்கை!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 12:10:13 PM (IST)

என்னுடைய ரசிகர்கள் மட்டுமல்ல.. த.வெ.கவின் விர்ச்சுவல் வாரியர்ஸ்: விஜய் பேச்சு
சனி 19, ஏப்ரல் 2025 4:44:50 PM (IST)

SRINIVASANMar 19, 2025 - 11:15:55 AM | Posted IP 104.2*****