» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய மருந்து விற்பனை பிரதிநிதி கைது
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:35:28 AM (IST)
நெல்லையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய விவகாரத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி நான்குவழிச்சாலை அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது. ஏற்கனவே நெல்லை அருகே கொட்டப்பட்ட கேரள மருத்துவ கழிவுகள் அம்மாநிலத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இந்த நிலையில் நெல்லையில் மீண்டும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பெருமாள்புரம் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பாளையங்கோட்டை சமாதானபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (35) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருவதும், சம்பவத்தன்று அவர் விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த மருந்துகள் காலாவதி ஆனதால், அந்த மருந்துகளை ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை அருகில் கொட்டிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொகுதி மறுவரையறையை தென் மாநிலங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது: ரேவந்த் ரெட்டி
சனி 22, மார்ச் 2025 5:26:56 PM (IST)

காலநிலை மாற்றத்தினை உணர்ந்து செயல்பட வேண்டும்: ஆட்சியர் இரா.சுகுமார் பேச்சு
சனி 22, மார்ச் 2025 4:52:50 PM (IST)

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 466 பேருக்கு பணி நியமன ஆணை: சபாநாயகர் வழங்கினார்!
சனி 22, மார்ச் 2025 4:39:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் 17 வழித்தடங்களுக்கு புதிய பேருந்து சேவை: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்
சனி 22, மார்ச் 2025 4:33:45 PM (IST)

எக்காரணம் கொண்டும் மாநில உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்” - டி.கே.சிவகுமார் திட்டவட்டம்!
சனி 22, மார்ச் 2025 11:56:37 AM (IST)

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் பள்ளி மாணவன் கைது!
சனி 22, மார்ச் 2025 11:35:40 AM (IST)
