» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கூடங்குளம் அருகே பைக் மீது கார் மோதி விபத்து: கணவன்-மனைவி பரிதாப சாவு!
ஞாயிறு 9, பிப்ரவரி 2025 10:51:17 AM (IST)
கூடங்குளம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர்.
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அடுத்த பழவூர் அருகே உள்ள மாடன்பிள்ளைதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வன் (55). கூலித்தொழிலாளியான இவரது மனைவி பாலிங்க புஷ்பம் (45). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஆத்தங்கரை பள்ளிவாசல் அருகே உள்ள தங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்றனர்.
அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று 2 பேரும் ஊருக்கு கூடங்குளம் வழியாக திரும்பி வந்து கொண்டு இருந்தனர். கூடங்குளம் அருகே பஞ்சல் பகுதியில் சென்றபோது, அந்த வழியாக ஒரு கார் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கார்-மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் 2 பேரும் சாலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்து பழவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி செல்வன், பாலிங்கபுஷ்பம் ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில் குமரி மாவட்டம் குத்தளம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (30) என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் காரில் உவரி கோவிலுக்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கூடங்குளம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதியதில் கணவன்-மனைவி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொகுதி மறுவரையறையை தென் மாநிலங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது: ரேவந்த் ரெட்டி
சனி 22, மார்ச் 2025 5:26:56 PM (IST)

காலநிலை மாற்றத்தினை உணர்ந்து செயல்பட வேண்டும்: ஆட்சியர் இரா.சுகுமார் பேச்சு
சனி 22, மார்ச் 2025 4:52:50 PM (IST)

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 466 பேருக்கு பணி நியமன ஆணை: சபாநாயகர் வழங்கினார்!
சனி 22, மார்ச் 2025 4:39:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் 17 வழித்தடங்களுக்கு புதிய பேருந்து சேவை: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்
சனி 22, மார்ச் 2025 4:33:45 PM (IST)

எக்காரணம் கொண்டும் மாநில உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்” - டி.கே.சிவகுமார் திட்டவட்டம்!
சனி 22, மார்ச் 2025 11:56:37 AM (IST)

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் பள்ளி மாணவன் கைது!
சனி 22, மார்ச் 2025 11:35:40 AM (IST)
