» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பூதப்பாண்டி கோவில் தேரோட்டம்: தோவாளை வட்டத்திற்கு 10ம் தேதி உள்ளூர் விடுமுறை!
சனி 8, பிப்ரவரி 2025 5:48:08 PM (IST)
பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற 10ஆம் தேதி தோவாளை வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைங்கிணக்கவும், நிதி சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களின் தகவலின் படியும்தோவாளை வட்டம், பூதப்பாண்டி கிராமம் அருள்மிகு ஸ்ரீ பூதலிங்க சுவாமி சிவகாமி அம்மாள் திருக்கோவில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு இத்திருவிழாவானது 02.02.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தைப்பூச நட்சத்திரத்தின் முந்தைய நாளான (9-ம் நாள் திருவிழா) 10.02.2025 (திங்கள்கிழமை) அன்று நடைபெறும் தேரோட்ட நிகழ்வினை முன்னிட்டு தோவாளை வட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
10.02.2025 அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2025 பிப்ரவரி திங்கள் நான்காவது சனிக்கிழமை (22.02.2025) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை வட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881)-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 10.02.2025 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொகுதி மறுவரையறையை தென் மாநிலங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது: ரேவந்த் ரெட்டி
சனி 22, மார்ச் 2025 5:26:56 PM (IST)

காலநிலை மாற்றத்தினை உணர்ந்து செயல்பட வேண்டும்: ஆட்சியர் இரா.சுகுமார் பேச்சு
சனி 22, மார்ச் 2025 4:52:50 PM (IST)

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 466 பேருக்கு பணி நியமன ஆணை: சபாநாயகர் வழங்கினார்!
சனி 22, மார்ச் 2025 4:39:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் 17 வழித்தடங்களுக்கு புதிய பேருந்து சேவை: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்
சனி 22, மார்ச் 2025 4:33:45 PM (IST)

எக்காரணம் கொண்டும் மாநில உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்” - டி.கே.சிவகுமார் திட்டவட்டம்!
சனி 22, மார்ச் 2025 11:56:37 AM (IST)

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் பள்ளி மாணவன் கைது!
சனி 22, மார்ச் 2025 11:35:40 AM (IST)
