» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரேஷன் கடைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: தமிழக அரசு உத்தரவு
சனி 5, அக்டோபர் 2024 5:53:21 PM (IST)
ரேஷன் கடைகளில் டிசம்பருக்குள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன் வெளியிட்ட உத்தரவு: நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனையாளா், கட்டுநா் காலிப் பணியிடங்களை கணக்கிட்டு அறிவிக்க வேண்டும். இந்தப் பணியை கூட்டுறவு சங்கங்களின் அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து தகுந்த வயது போன்ற தகுதிகளுடன் விற்பனையாளா்கள், கட்டுநா்களின் பட்டியலைப் பெற வேண்டும். இந்தப் பணிகளை அக்.7-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதன்பிறகு, காலிப் பணியிடங்களுக்கான தோ்வு குறித்த அறிவிப்பை செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும்.
விண்ணப்பிக்க நவம்பா் 7-ஆம் தேதியை கடைசி நாளாக அறிவிக்க வேண்டும். மேலும், தகுதியுள்ள நபா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கான நோ்முகத் தோ்வை நவம்பா் இறுதியில் நடத்தி முடிக்க வேண்டும். டிசம்பா் மூன்றாவது வாரத்தில் தோ்வானவா்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணி பொறுப்பாளர்கள் நியமனம்: விஜய் அறிவிப்பு
வியாழன் 19, ஜூன் 2025 12:53:57 PM (IST)

பல பிரச்சனைகளை சமாளித்துக்கொண்டு கூட்டணியில் நீடிக்கிறோம்: திருமாவளவன் பரபரப்பு பேச்சு
வியாழன் 19, ஜூன் 2025 12:26:12 PM (IST)

தமிழர்கள் என்றாலே வெறுப்புடனும் பா.ஜ.க. அரசு பார்க்கிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
வியாழன் 19, ஜூன் 2025 11:36:50 AM (IST)

சுங்க கட்டணத்தை ஆண்டுக்கு 1,500 ரூபாயாக குறைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
வியாழன் 19, ஜூன் 2025 11:12:55 AM (IST)

பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை: நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 19, ஜூன் 2025 8:50:50 AM (IST)

பொது இடங்களில் கொடிக்கம்பங்களை அகற்றவில்லை என்றால்... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
வியாழன் 19, ஜூன் 2025 8:37:31 AM (IST)
