» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்தில் நாளை 72 மையங்களில் குரூப் 2 தேர்வு: ஆட்சியர் அழகுமீனா தகவல்!
வெள்ளி 13, செப்டம்பர் 2024 4:19:30 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை நடைபெறும் குரூப் 2 தேர்வினை 72 மையங்களில் 20335 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர் என்று ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்த பெறும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி - II (தொகுதி 2 மற்றும் 2A) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 14.09.2024 அன்று முற்பகல் நடைபெற உள்ளது. மேற்படி தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்கு உட்பட்ட 45 தேர்வு மையங்களிலும், விளவங்கோடு வட்டத்திற்கு உட்பட்ட 27 தேர்வு மையங்களிலும் 20335 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இத்தேர்வு தொடர்பாக 2 கண்காணிப்பு அலுவலர்களும், 7 பறக்கும் படை அலுவலர்களும், 19 Mobile Unit-களும், ஒவ்வொரு தேர்வு அறைக்கும் தலா ஒருவர் வீதம் 72 ஆய்வு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் காலை 08.30 மணி முதல் 09.00 மணிக்குள் இருக்க வேண்டும். காலை 09.00 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வர்கள் தவறாமல் தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்டுள்ள தொகுதி II தேர்விற்கான நுழைவுச்சீட்டு கொண்டு செல்ல வேண்டும். தேர்வு அறைக்குள் தேர்வர்கள் கைப்பேசி, மின்னணு கடிகாரம், கால்குலேட்டர் ஆகியவற்றை கொண்டு செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் கருப்புநிற பந்து மை பேனா மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சனி 26, ஏப்ரல் 2025 12:43:35 PM (IST)

த.வெ.க. கட்சியின் தலைவர் விஜய் கோவை வருகை: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
சனி 26, ஏப்ரல் 2025 12:29:48 PM (IST)

தடைசெய்யப்பட்ட மையோனைஸ் பயன்படுத்தும் உணவு வியாபாரிகள் மீது நடவடிக்கை: அரசு உத்தரவு!
சனி 26, ஏப்ரல் 2025 12:04:15 PM (IST)

காஷ்மீர் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்: ரஜினிகாந்த் பேட்டி
சனி 26, ஏப்ரல் 2025 11:36:10 AM (IST)

ஸ்டெர்லைட் ஆலையை விட என்எல்சியால் பலமடங்கு கேடு: நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்!
சனி 26, ஏப்ரல் 2025 10:59:27 AM (IST)

கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 4 பேர் பலி; முதல்வர் இரங்கல்: நிவாரண நிதியுதவி அறிவிப்பு
சனி 26, ஏப்ரல் 2025 10:54:25 AM (IST)
