» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்தில் ரூ.1.4 கோடியில் கால்வாய் சீரமைப்பு பணிகள் : ஆட்சியர் ஆய்வு!!
செவ்வாய் 25, ஜூன் 2024 12:38:11 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1.4 கோடி மதிப்பில் தோவாளை கால்வாய் நிரந்தரமாக சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம், திடல் ஊராட்சிக்குட்பட்ட உலக்கரி – தூவச்சி பகுதியில் நடைபெற்று வரும் தோவாளை சானல் நிரந்தர சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இன்று (25.06.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில் "கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது தோவாளை ஊராட்சி ஒன்றியம் திடல் ஊராட்சிக்குட்பட்ட உலக்கரி - தூவச்சி பகுதி தோவாளை சானலில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மணல் மூட்டைகள் அடுக்கி போர்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தோவாளை சானலினை நிரந்தரமாக சீரமைக்க வேண்டுமென விவசாயிகள், விவசாய சங்கங்கள், கால்வாய் பாசன விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் தோவாளை சானலினை சீரமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசு இக்கோரிக்கையினை ஏற்று வெள்ள சேத பகுதிகளை நிரந்தரமாக மீட்டெடுக்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.4 கோடி மதிப்பில் சுமார் 15 கி.மீ நீளத்தில் சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தோவாளை சானலினை நிரந்தரமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை தரமானதாகவும், உறுதி தன்மையுடனும் அமைத்திட துறை சாரந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, பணிகளை விரைந்து முடித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஆய்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் பொறி.ஜோதிபாசு, தோவாளை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தினி பகவதியப்பன், உட்கோட்ட அலுவலர் பொறி.கிங்ஸ்லி, விவசாய சங்க பிரதிநிதிகள் ராகிசன் முத்து, செண்பகசேகரன் பிள்ளை உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மார்ச் 29-ந் தேதி சனிப்பெயர்ச்சி நிகழாது: திருநள்ளாறு கோவில் நிர்வாகம் அறிவிப்பு!
செவ்வாய் 25, மார்ச் 2025 10:16:31 AM (IST)

தெற்கு தாமரைக்குளத்தில் நவீன மறுநில அளவை பணி நாளை தொடக்கம்: ஆட்சியர் தகவல் !
செவ்வாய் 25, மார்ச் 2025 10:07:13 AM (IST)

கடந்த 3 மாதங்களில் நாட்டிலேயே அதிக மழையை பெற்றுள்ள தென் மாவட்டங்கள்!
திங்கள் 24, மார்ச் 2025 8:32:18 PM (IST)

மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கில் தேடப்பட்டவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு கைது!
திங்கள் 24, மார்ச் 2025 8:27:28 PM (IST)

மதுரையில் போலீஸ்காரரை எரித்துக்கொன்ற ஆட்டோ டிரைவர் கைது: பரபரப்பு தகவல்!
திங்கள் 24, மார்ச் 2025 8:22:48 PM (IST)

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்
திங்கள் 24, மார்ச் 2025 5:13:22 PM (IST)
