» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீசார் விசாரணை
ஞாயிறு 23, ஜூன் 2024 8:48:14 AM (IST)
புளியங்குடியில் பள்ளிஆசிரியை வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் ஆசிரியர் தம்பதி பள்ளிக்கூடத்துக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றனர். மதியம் ஆசிரியை உமாதேவி அரைநாள் விடுமுறை எடுத்து கொண்டு, பள்ளியில் இருந்து வீடு திரும்பினார். மாலையில் பள்ளி முடிந்ததும் ஆசிரியர் ரவிகுமார் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் உமாதேவி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கியவாறு கிடந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவிகுமார் கதறி அழுதார். இதுகுறித்து புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த ஆசிரியை உமாதேவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
ஆசிரியை உமாதேவி பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புளியங்குடியில் ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

அனுமதி மீறி போராட்டம் நடத்துவது அரசியல் கட்சிக்கு அழகல்ல: உயர்நீதிமன்றம் கண்டனம்!
புதன் 9, ஜூலை 2025 5:38:20 PM (IST)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)

சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆசிரியர்கள் தக்க பாடத்தை கற்பிப்பார்கள்: நயினார் நாகேந்திரன்
புதன் 9, ஜூலை 2025 5:07:26 PM (IST)

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து : 13 பேருக்கு ரயில்வே விசாரணை குழு சம்மன்
புதன் 9, ஜூலை 2025 4:19:04 PM (IST)

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடப் பணிகள்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
புதன் 9, ஜூலை 2025 4:08:01 PM (IST)
