» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆடையின்றி சென்ற பெண்ணின் மானம் காத்த பெண் போலீஸ் - பாராட்டுக்கள் குவிகிறது!
சனி 25, மார்ச் 2023 10:50:42 AM (IST)
நாகர்கோயிலில் சாலையில் ஆடையின்றி சென்று கொண்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆடை போர்த்தி மானம் காத்த பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில், மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பில், சாலையோரம் ஆடையின்றி நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்போது, அந்த வழியாக வந்த தலைமைக் காவலர் சரஸ்வதி ஓடோடிச் சென்று, அந்த பெண்ணின் உடலில் ஆடை ஒன்றை போர்த்தி அவரது மானம் காத்து, அழைத்துச் சென்றார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் டையின்றி நடந்து சென்று கொண்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆடை போர்த்தி மானம் காத்த தலைமைக் காவலர் சரஸ்வதியை குமரி மாவட்ட எஸ்பி ஹரி கிரன் பிரசாத் நேரில் வரவழைத்து பாராட்டினார்.