» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.3 இலட்சம் நிதியுதவி : ஆட்சியர் ஸ்ரீதர் வழங்கினார்

வெள்ளி 24, மார்ச் 2023 11:27:19 AM (IST)



கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.3 இலட்சம் நிதியுதவியினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் டாக்டர் நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் செய்தியாளராக பணிபுரிந்து மறைந்த வேல்முருகன் மனைவி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நிதியுதவி வழங்க கோரி மனு அளித்தார். அதனடிப்படையில், குமரி மாவட்ட பத்திரிகையாளர் குடும்ப உதவி திட்டத்தின் கீழ் மறைந்த பத்திரிக்கையாளர் வேல்முருகனின் மனைவி ஆர்.பொன்னம்மாள் அவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்,  வழங்கினார். 
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவப்பிரியா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தே.திருப்பதி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ஜா.லெனின் பிரபு ஆகியோர் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory