» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 80 பவுன் நகை, 1½ கிலோ வெள்ளி கொள்ளை!

திங்கள் 27, ஜூன் 2022 12:47:12 PM (IST)

நாகர்கோவிலில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 80 பவுன் நகை மற்றும் 1½ கிலோ வெள்ளியை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
 
குமரி மாவட்டம், நாகர்கோவில் வடலிவிளை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆன்டேஷ்வரன் (47), நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மணல் ஆலையில் மேலாளராக உள்ளார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், 2 மகன்களும் உண்டு. மூத்த மகன் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். எனவே மகனை பார்ப்பதற்காக ஆன்டேஷ்வரன் குடும்பத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை சென்னைக்கு சென்றார்.

இந்நிலையில் ஆன்டேஷ்வரன் வளர்த்து வரும் நாய்க்கு உணவு வைப்பதற்காக நேற்று இரவு வேலைக்கார பெண் வந்தார். அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நேற்று முன்தினம் இரவில் யாரோ மர்ம நபர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வேலைக்கார பெண் உடனே கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் பின்புற கதவு வழியாக உள்ளே சென்று பார்வையிட்டனர். 

அப்போது வீட்டில் இருந்த பீரோ, லாக்கர் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது. இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, "ஆன்டேஷ்வரனிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவரது வீட்டில் 80 பவுன் நகை மற்றும் 1½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனதாக தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.

முன்னதாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்து மர்ம நபர்களின் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. ஆன்டேஷ்வரன் வாரம் வாரம் விடுமுறை தினத்தன்று மகனை பார்ப்பதற்காக சென்னைக்கு குடும்பத்துடன் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதை நன்கு அறிந்த மர்ம நபர்கள் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்க கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory