» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மெரினா கடற்கரையில் நூதன முறையில் சாராயம் விற்பனை: 3 வடமாநில பெண்கள் கைது!

திங்கள் 16, மே 2022 10:17:38 AM (IST)

மெரினா கடற்கரையில் நூதன முறையில் கூல்டிரிங்ஸ் பாட்டிலில் அடைத்து சாராயம் விற்பனை செய்த 3 வடமாநில பெண்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை பின்புறம் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 40 பேர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆந்திராவில் இருந்து எரிசாராயத்தை கடத்தி வந்து மெரினா கடற்கரை மணல் பரப்பில் புதைத்து வைத்து, விற்பனை செய்வதாக மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் தலைமையிலான தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில், உதவி ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான தனிப்படையினர் மெரினா கடற்கரை பகுதியில் ரகசியமாக பொதுமக்கள் போல் இரவு நேரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, 3 வடமாநில பெண்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் மெரினா மணல் பரப்பில் புதைத்து வைத்திருந்த கேன் ஒன்றை வெளியே எடுத்தனர். இதை பார்த்த தனிப்படையினர் உடனே விரைந்து சென்று மணல் பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட கேனை திறந்து பார்த்த போது, அதில் 35 லிட்டர் எரிசாராயம் இருந்தது தெரியவந்தது.

உடனே 3 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சுனந்தா, ஷில்பா போஸ்லே, ஜென்துஸ் கோஸ்லயா என தெரியவந்தது. இவர்கள் ஆந்திராவில் இருந்து பேருந்து மற்றும் ரயில் மூலம் சாராயத்தை கடத்தி வந்து, அதை மெரினா கடற்கரையில் உள்ள மணல் பரப்பில் புதைத்து வைத்து, இரவு நேரத்தில் மெரினா மணல் பரப்பில் தூங்கும் முதியவர்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், இவர்கள் பகல் நேரத்தில் கூலி வேலைக்கு செல்வதும், இரவு நேரத்தில் சாராய விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், வெளியில் யாருக்கும் சந்தேகம் வராதபடி பழைய ‘கூல்டிரிங்ஸ்’ பாட்டில்களை விலைக்கு வாங்கி வந்து, அதில் சாராயத்தை நிரப்பி ஒரு பாட்டில் ரூ.50க்கும் விற்பனை செய்து வந்துள்ளனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக இவர்கள் தனித்தனி குழுவாக பிரிந்து மெரினா கடற்கரையில் இரவு நேரத்தில் சாராயம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து. போலீசார், 3 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory