» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பலத்த மழை எதிரொலி: பாலக்காடு - பாலருவி சிறப்பு ரயில் பகுதியாக ரத்து!
திங்கள் 18, அக்டோபர் 2021 4:37:39 PM (IST)
கேரள மாநிலத்தில் பலத்த மழை காரணமாக செங்கோட்டை - புனலூர் ரயில்வே பிரிவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கீழ்க்கண்ட ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இன்று (18.10.2021) சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06101 சென்னை எழும்பூர் - கொல்லம் சிறப்பு ரயில், நாளை (19.10.2021) கொல்லத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06102 கொல்லம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஆகியவை செங்கோட்டை - கொல்லம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும் இன்று (18.10.2021) பாலக்காட்டில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06792 பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 06791 திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி சிறப்பு ரயில் ஆகியவை அம்பாசமுத்திரம், செங்கோட்டை, புனலூர் ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படுவதற்குப்பதிலாக நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம், கொல்லம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.