» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை காவல்துறை ஆணையர் உள்பட 5 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

திங்கள் 18, அக்டோபர் 2021 4:28:16 PM (IST)

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வும், 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றமும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. சங்கர் ஜிவால் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றாலும் சென்னை காவல் ஆணையராக தொடருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ள ஏ.கே.விஸ்வநாதன் வீட்டு வசதி கழகத்தின் தலைவராக தொடர்வார்.டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ள ஆபாஷ் குமார், டி.வி.ரவிசந்திரன், சீமா அகர்வால் ஆகியோர் தங்கள் துறையில் தொடருவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ள ஏ.கே.விஸ்வநாதன் வீட்டு வசதி கழகத்தின் தலைவராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏடிஜிபி மகேஷ் குமார் சென்னை அமலாக்கத்துறையின் ஏடிஜிபியாகவும், ஐஜி கபில் குமார் சென்னை அமாலாக்கத்துறையின் ஐஜியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory