» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பலத்த மழையால் செங்கோட்டை - புனலூர் ரயில்வே பிரிவில் நிலச்சரிவு: ரயில்கள் ரத்து

திங்கள் 18, அக்டோபர் 2021 12:20:30 PM (IST)



கேரளத்தில் பலத்த மழை காரணமாக செங்கோட்டை - புனலூர் ரயில்வே பிரிவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கீழ்க்கண்ட ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இன்று (17.10.2021) சென்னையில் இருந்து புறப்படும் வண்டி எண் 06101 சென்னை எழும்பூர் கொல்லம் சிறப்பு ரயில், நாளை (18.10.2021) கொல்லத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06102 கொல்லம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஆகியவை செங்கோட்டை - கொல்லம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

மேலும் இன்று (17.10.2021) பாலக்காட்டில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06792 பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 06791 திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி சிறப்பு ரயில் ஆகியவை திருநெல்வேலி - புனலூர் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory