» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை டூ திருவள்ளூர், டிஜிபி சைலேந்திர பாபு சைக்கிளிங்: காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு!

ஞாயிறு 17, அக்டோபர் 2021 10:04:53 PM (IST)

சென்னையிலிருந்து திருவள்ளூருக்கு சைக்கிளிங் சென்ற டிஜிபி சைலேந்திரபாபு அங்குள்ள அங்குள்ள காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு டிஜிபியாக பொறுப்பேற்றது முதல் மிகவும் சுறுசுறுப்பாகவும், தீவிரமாகவும் தனது பணியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில்,  சென்னையில் இருந்து இன்று காலை திருவள்ளூருக்கு சைக்கிளிங் சென்ற டிஜிபி சைலேந்திரபாபு அங்குத் தீயணைப்புத் துறை வீரர்களைச் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து திருவள்ளூர் கிராமிய காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் டிஜிபி சைலேந்திரபாபு திடீரென ஆய்வு செய்தார். அங்குக் கோப்புகள் முறையாகப் பாதுகாக்கப்படுகிறதா, எஃப்ஐஆர் உரிய விதிமுறைகளைப் பின்பற்றிப் பதிவு செய்யப்படுகிறதா போன்றவற்றை அவர் ஆய்வு செய்தார். பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள கம்பியூட்டர் அறை, ஆய்வாளர் அறைகளுக்கும் சென்று அவர் ஆய்வு செய்தார்.

அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்த அவர், போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து காவலர்களின் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்த அவர், போன் பறிப்பு உள்பட குற்றச் சம்பவங்கள் குறித்தும் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து காவலர்களின் கோரிக்கைகளான பணியிட மாற்றம் மற்றும் இதர குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் அங்கிருந்து நேரடியாக போலீஸ் குடியிருப்புக்குச் சென்ற அவர், அங்குள்ள போலீஸ் குடும்பங்களைச் சந்தித்து போலீஸ் குடியிருப்பு வசதிகள், சரி செய்ய வேண்டிய குறைகள் ஆகியவை குறித்து விரிவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். பின்னர் அங்கிருந்த குழந்தைகளைச் சந்தித்துக் கலந்துரையாடிய டிஜிபி சைலேந்திரபாபு, அவர்களுக்குப் புத்தகங்களையும் பரிசாக வழங்கினார். மேலும் காவலர்களின் குழந்தைகள் சிலம்பாட்டத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து ஊக்கப்பரிசும் அவர் வழங்கினார். இது முடிந்த பிறகு அங்கிருந்து ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள பூண்டியில் உள்ள நீர்த்தேக்கத்திற்குச் சுற்றிப் பார்க்கத் தனது சைக்கிளிங்  பயணத்தைத் தொடர்ந்தார். இந்த ஆய்வின் போது அவருடன் பல்வேறு போலீசாரும் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து

mohanOct 18, 2021 - 06:48:29 PM | Posted IP 108.1*****

super

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory