» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது: சி.வி.சண்முகம்

ஞாயிறு 17, அக்டோபர் 2021 10:01:08 PM (IST)

ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறி உள்ளார்.

அதிமுகவின் பொன் விழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,  'பண்ருட்டி ராமசந்திரன், நெடுஞ்செழியன், உள்ளிட்ட பெரிய தலைவர்களை பார்த்த இயக்கம் அதிமுக, அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று இடம் தெரியாமல் போயிட்டார்கள், ஆகவே மீண்டும் சொல்கிறேன்.  நிஜமாக இருந்தவர்களாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. சசிகலா நீங்கள் நிழல். உங்களால் அ.தி.மு.க. வை ஒன்றும் செய்ய முடியாது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory