» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாடு முழுவதும் நூலகங்களை திறக்க பொதுநூலக இயக்குனரகம் அனுமதி
சனி 24, ஜூலை 2021 4:46:20 PM (IST)
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நூலகங்களை திறக்க பொதுநூலக இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. சிறுவர்கள், கர்ப்பிணிகள், 65 வயதானவர்கள் நூலகம் வர அனுமதியில்லை.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து நூலகங்களும் மூடப்பட்டன. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டபோது நூலகங்கள் திறக்கப்படாத நிலையில் பலரும் நூலகங்களை திறக்க கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் நூலகங்களை திறக்க பொதுநூலக இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.
நூலகத்திற்கு வருவோருக்கான கட்டுப்பாடுகள்
* போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள பொது நூலகங்கள் இன்று முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
* கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள நூலகங்களை தவிர்த்து பிற நூலகங்களைத் திறக்கலாம்.
* 15 வயதிற்கும் குறைவாக உள்ள சிறுவர்கள், கர்ப்பிணிகள், 65 வயதானவர்கள் நூலகம் வர அனுமதியில்லை
இவ்வாறு, பொது நூலகத்துறை இயக்குனர் நாகராஜ முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
adaminJul 24, 2021 - 04:54:26 PM | Posted IP 162.1*****