» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அம்பை அருகே ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை : கடன் பிரச்சனையால் விபரீதம்!!

சனி 24, ஜூலை 2021 3:51:26 PM (IST)

அம்பை அருகே கடன் பிரச்சனையால் விரக்தியடைந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் வெங்கடேஷ் (33) இவருக்கு திருமணமாகி கலைச்செல்வி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். வெங்கடேஷ் சென்னையில் டிராவல்ஸ் நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடன் பிரச்சினை காரணமாக சொந்த ஊருக்கு வந்து உள்ளார். அவர் சிறிது நாட்களாகவே கடன் பிரச்சினை காரணமாக மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று அதிகாலையில் தென்காசிலிருந்து திருநெல்வேலி செல்லும் ரயிலில் புளியங்குளம் கேட் அருகில் கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory