» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டின் வெளியே தூங்கிய பெண் பாம்பு கடித்துப் பரிதாப பலி! – தூத்துக்குடி அருகே பரிதாபம்!

ஞாயிறு 24, மே 2026 2:09:01 PM (IST)

தூத்துக்குடி அருகே கோடை வெப்பம் காரணமாக வீட்டின் வெளிமுற்றத்தில் தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பெண், விஷப் பாம்பு பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே அல்லிக்குளம், மேற்குத் தெருவில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவரது மனைவி பஞ்சவர்ணம் (47). தற்போது அக்னி வெயிலின் தாக்கம் மற்றும் கடுமையான வெப்பம் காரணமாக, பஞ்சவர்ணம் நேற்று இரவு தனது வீட்டின் வெளியே உள்ள வெளிமுற்றத்தில் தரையில் பாய் விரித்துப் படுத்து உறங்கியுள்ளார். அப்போது ஒரு விஷப் பாம்பு, பஞ்சவர்ணத்தின் வலது தோள்பட்டைப் பகுதியில் கடித்துள்ளது. 

பாம்பு கடித்த வேதனையில் அவர் அலறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பஞ்சவர்ணம் இறந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory