» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 14 மணிநேர தொடர் மின்வெட்டு : பொதுமக்கள் கடும் அவதி!
ஞாயிறு 24, மே 2026 12:31:32 PM (IST)
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை சுமார் 14 மணிநேரம் நீடித்த தொடர் மின்வெட்டு காரணமாக அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட லூர்தம்மாள்புரம் பகுதியில் நேற்று (மே 23) சனிக்கிழமை மாலை 6:00 மணி அளவில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்த மின்வெட்டானது இரவு முழுவதும் நீடித்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8:00 மணிக்கு மேல் தான் மீண்டும் மின் விநியோகம் சீராகியுள்ளது.
கோடைகாலம் தீவிரமடைந்துள்ள நிலையில், இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால் சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரும் தூக்கமின்றி தவித்துள்ளனர். 14 மணிநேர தொடர் மின்வெட்டு காரணமாகப் அன்றாடப் பணிகளும், குடிநீர் விநியோகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
முறையான முன்னறிவிப்பு ஏதுமின்றி, இவ்வளவு நீண்ட நேரம் மின்சாரத்தை முடக்கிய மின்வாரிய அதிகாரிகளின் செயல்பாட்டிற்குப் பொதுமக்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இனிவரும் காலங்களில் இது போன்ற நீண்ட நேர மின்வெட்டுகள் ஏற்படாத வண்ணம் மின்வாரிய உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என லூர்தம்மாள்புரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ஞாயிறு 24, மே 2026 8:38:47 PM (IST)

உரத்தின் விலையை பல மடங்கு உயர்ந்திய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் முடிவு!
ஞாயிறு 24, மே 2026 8:36:21 PM (IST)

வீட்டின் வெளியே தூங்கிய பெண் பாம்பு கடித்துப் பரிதாப பலி! – தூத்துக்குடி அருகே பரிதாபம்!
ஞாயிறு 24, மே 2026 2:09:01 PM (IST)

குடும்பத் தகராறில் விஷம் குடித்த விவசாயி சாவு!
ஞாயிறு 24, மே 2026 2:00:56 PM (IST)

தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உடைகள், கையுறைகள் : மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்
ஞாயிறு 24, மே 2026 12:42:00 PM (IST)

தூத்துக்குடி டாஸ்மாக் குடோனில் அதிகாரிகள் அராஜகம்: சிஐடியு முற்றுகைப் போராட்ட எச்சரிக்கை!
ஞாயிறு 24, மே 2026 11:37:41 AM (IST)










