» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மது விற்பனையில் ஆதார், கைரேகை கட்டாயம் : புதிய முறையை அமல்படுத்தக் கோரிக்கை!

திங்கள் 11, மே 2026 4:02:10 PM (IST)

தமிழகத்தில் மதுப்பிரியர்களின் நலன் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, மது விற்பனையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் மனு அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள மனுவில் "ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு மில்லி அளவுதான் மதுபானம் வழங்க வேண்டும் என்பதை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். மதுபானம் வாங்குபவர்களின் ஆதார் அடையாள அட்டை மற்றும் கைரேகையைப் பதிவு செய்த பின்னரே மது விநியோகம் செய்யப்பட வேண்டும்.

ஏற்கனவே மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்திற்காக (பாட்டிலுக்கு ₹10) நான்கு ஆண்டுகள் அறவழிப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதைச் சுட்டிக்காட்டிய அவர், அதேபோல் ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதைப் போன்ற முறையை மது விற்பனையிலும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory