» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தேர்தல் ஆயத்த பணிகள் தீவிரம் : ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

வெள்ளி 20, பிப்ரவரி 2026 3:38:34 PM (IST)



தூத்துக்குடியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மாவட்ட நுண்ணறிவு குழுவினருக்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் க. இளம்பகவத்,  தலைமையில் நடைபெற்றது. 

தூத்துக்குடியில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மாவட்ட நுண்ணறிவு குழுவினருக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத்,  தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சி. மதன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நுண்ணறிவுத் தகவல்களைச் சேகரிப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory