» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காற்றாலை நிறுவனங்களுக்காக சோலார் விளக்கு, மரத்தை அகற்றக் கூடாது: பொதுமக்கள் கோரிக்கை!

வெள்ளி 20, பிப்ரவரி 2026 12:06:13 PM (IST)

பொட்டலூரணி விலக்கு பேருந்து நிறுத்தத்தில் உள்ள சோலார் மின் விளக்கு மற்றும் அரச மரத்தை அகற்றக் கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம்  பொட்டலூரணி, செக்காரக்குடி, அழகாபுரி உள்ளிட்ட பல கிராம மக்கள் இந்தப் பேருந்து நிறுத்தத்தையே சார்ந்துள்ளனர். இப்பகுதியில் காற்றாலை இறக்கைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, நெடுஞ்சாலைத் துறை அனுமதியுடன் சோலார் விளக்கு மற்றும் மரத்தை அகற்ற முயற்சிகள் நடப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சாலை மறியல் போராட்டத்தின் போது கோட்டாட்சியர் அளித்த உறுதிமொழியின்படி இந்தச் சோலார் விளக்கு அமைக்கப்பட்டது. ஆனால், ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் உயர் கோபுர மின் விளக்கு அமைத்துத் தரப்படவில்லை. போராடிப் பெற்ற சோலார் விளக்கையும், நிழல் தரும் மரத்தையும் அகற்ற அனுமதி அளிக்கக் கூடாது.

நிழல் தரும் மரத்தையும், இந்த விளக்கையும் மக்கள் தெய்வமாகவே கருதி வருகின்றனர். பொதுமக்களின் உணர்வுகளுக்கு எதிராக இவற்றை அகற்ற அரசு அனுமதி அளிக்கக் கூடாது, என மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory