» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!

வியாழன் 19, பிப்ரவரி 2026 4:49:08 PM (IST)

தூத்துக்குடியில் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மனமுடைந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி ஜாகீர் உசேன் நகரைச் சேர்ந்தவர் முகமது ஷேக். இவரது மனைவி சகீரா பேகம் (40). இந்தத் தம்பதியினருக்குக் குழந்தைகள் இல்லை எனத் தெரிகிறது. நேற்று இரவு சகீரா பேகம் தனது கணவருக்கு குக்கரில் சாதம் சமைத்து வைத்துள்ளார். ஆனால், தனக்கு குக்கர் சாதம் பிடிக்காது என்று முகமது ஷேக் கூறியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்ட முகமது ஷேக், அருகில் உள்ள தனது தாயார் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

கணவர் கோபித்துச் சென்றதால் மிகுந்த மனவேதனை அடைந்த சகீரா பேகம், வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார், சகீரா பேகத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory