» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மரத்திலிருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

வியாழன் 19, பிப்ரவரி 2026 4:43:03 PM (IST)

தூத்துக்குடியில் மரத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி சிலுவைபட்டி, ஆனந்த் நகரைச் சேர்ந்தவர் வேலு மகன் அரிகிருஷ்ணன் (50). கடல் தொழிலாளியான இவர், கடந்த 8-ம் தேதி தனது வீட்டின் அருகிலிருந்த கொடுக்காப்புளி மரத்தில் ஏறி பழம் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்ததில், அரிகிருஷ்ணனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அரிகிருஷ்ணன், நேற்று இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory