» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வருவாய் கிராம ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தல்!

வியாழன் 19, பிப்ரவரி 2026 11:44:26 AM (IST)



வரையறுக்கப்பட்ட காலம் வரை ஊதியம் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் வருவாய் கிராம ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் (TNRVEA) சார்பில், மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இன்று (19.02.2026) முதல் தொடர் வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

வரையறுக்கப்பட்ட காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும், TAPS பென்ஷன் திட்டத்தில் கிராம உதவியாளர்களையும் சேர்த்து அரசாணை வழங்க வேண்டும், கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கும்போது, கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என  மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தக் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.

போராட்டத்திற்கு வட்டத் தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் ராஜேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். போராட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் குறித்து மாவட்டத் தலைவர் குமாரலிங்கம் மற்றும் மாவட்டச் செயலாளர் கார்த்திக் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர். இறுதியாக வட்டப் பொருளாளர் ஹசீனா கஜிதா பானு நன்றியுரை வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory