» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போதிய மழையின்றி பயிர்கள் கருகியதால் சோகம்: வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை!

வியாழன் 19, பிப்ரவரி 2026 11:19:10 AM (IST)



கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் போதிய மழையின்றி பயிர்கள் கருகியதால், இப்பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தனித்தனி மனுக்களுடன் வந்து மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்தனர். 

அவர்கள் அளித்த மனுவில், "கோவில்பட்டி வட்டத்தில் பருவமழை பொய்த்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, இப்பகுதியை வறட்சி நிறைந்த பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும். பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் போதிய நீரின்றி கருகிவிட்டதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

சேதமடைந்த பயிர்களுக்குக் காப்பீட்டுத் தொகையை விரைந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள எங்களது கிராமங்களில் இந்த ஆண்டு மழையளவு மிகக்குறைவாக உள்ளது. பெரும் செலவு செய்து பயிரிட்ட பயிர்கள் கண்முன்னேயே கருகி வருவது வேதனையளிக்கிறது. அரசு உடனடியாக தலையிட்டு எங்களைக் காக்க வேண்டும்," என விவசாயிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

நல்லதுFeb 19, 2026 - 01:52:40 PM | Posted IP 162.1*****

நடக்கும். நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory