» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஷஃபான் பிறை: பிப்.3ல் பராஅத் இரவு அனுசரிப்பு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:13:07 PM (IST)
தமிழகத்தில் பிப்.3ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பரக்கத்துகள் நிறைந்த பராஅத் இரவு அனுசரிக்கப்படுவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன.
தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று (19-01-2026, திங்கட்கிழமை) ஹிஜ்ரீ 1447 ஷஃபான் மாத பிறை தென்படவில்லை. இதனால் ரஜப் மாதம் 30 நாள்களாக பூர்த்தி செய்யப்படுவதாகவும், வருகிற 21-01-2026 புதன்கிழமை ஷஃபான் பிறை 1 தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 03-02-2026 செவ்வாய்க்கிழமை மாலை பின்னேரம் (ஷஃபான் பிறை 15) பரக்கத்துகள் நிறைந்த பராஅத் இரவு அனுசரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 04-02-2026 புதன்கிழமை நிஸ்ஃபு ஷஃபான் தினமாகும் என்றும், அன்றைய தினம் சுன்னத்தான நோன்பு நோற்கும் நாள் எனவும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஜமாஅத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி கணக்கு : உத்திரப்பிரதேச வாலிபர் கைது
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:36:56 PM (IST)

கலைத்திருவிழாவில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:42:58 PM (IST)

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:18:25 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் ரூ. 784 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:12:09 PM (IST)

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர் மீது தாக்குதல் : காவல் நிலையம் முற்றுகை!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:02:32 PM (IST)

வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:55:28 PM (IST)










