» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தெரு நாய்கள் கடித்து மக்கள் பாதிப்பு : மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

புதன் 10, டிசம்பர் 2025 10:00:34 AM (IST)



தூத்துக்குடி மாநகரப்பகுதியில் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். நாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாநகரப்பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது, இதனால் பொதுமக்களுக்கு, குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நாய் கடிப்பால் ஏற்படும் அச்சமும், மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பூசிக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தூத்துக்குடி பேருந்து நிலையம், மார்க்கெட், கோவில் வளாகங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் என எல்லா இடங்களிலும் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன, இதனால் மக்கள் வெளியில் செல்ல அஞ்சுகின்றனர். 

தூத்துக்குடி மேல சண்முகபுரம், கீழ சண்முகபுரம் உள்ளிட்ட மாநகரின் அனைத்து வார்டுகளிலும் அதிக நாய்கள் தொல்லை இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டும் ஒரே வாரத்தில் 80க்கும் மேற்பட்டோர் தடுப்பூ ஊசி போட்டுள்ளதாகவும், தூத்துக்குடி மாநகர் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory