» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் ரயில் மோதி முதியவர் பலி!

ஞாயிறு 7, டிசம்பர் 2025 1:44:30 PM (IST)

கோவில்பட்டியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி மாவட்டம்,  கோவில்பட்டி கடம்பூர் ரயில் நிலையத்துக்கு இடையே லட்சுமி மில் மேம்பாலம் பின்பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் 60 வயது ஒருவர் ரயில் மோதி இறந்து கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் அவர் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் போது ரயிலில் அடிபட்டு இறந்ததாக தெரியவந்தது. மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து ஆலம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory