» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மணல்திட்டுகளை அகற்றும் பணி: மேயர் ஆய்வு

திங்கள் 17, நவம்பர் 2025 10:38:50 AM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மணல்திட்டுகளை அகற்றும் பணியை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பருவசூழ்நிலைக்கு ஏற்ப சாலைகளில் பல்வேறு இடங்களில் மணல் திட்டுகள் தேங்குகிறது. அதனால் சில சமயங்களில் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இதைஅப்புறம் படுத்தும் பணி 60 வாா்டுக்குட்பட்ட பிரதான சாலையில் மாநகராட்சி சுகாதார பணிகள் அலுவலா்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட ஜாா்ஜ் ரோடு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மணல்திட்டுகளை அகற்றும் பணியை மேயா் ஜெகன்பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின் போது, வடக்கு மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ் பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டி போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா் உள்பட மாநகராட்சி அலுவலா்கள் பொதுமக்கள் இருந்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory