» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கார் டிரைவருக்கு அரிவாள் வெட்டு : நண்பர் கைது!

திங்கள் 17, நவம்பர் 2025 8:41:52 AM (IST)

சாத்தான்குளத்தில் மதுபோதையில் கார் டிரைவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய நண்பரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஓடக்கரை தெருவை சேர்ந்த பழனி மகன் பேச்சிமுத்து (30). கார் டிரைவர். இவரும், அதேபகுதியை சேர்ந்த தொழிலாளி வேல்முருகன்(34) என்பவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு சாத்தான்குளம் கரையடிகுளம் அருகே பேச்சிமுத்து மதுபோதையில் நின்று கொண்டிருந்தார். அப்போது வேல்முருகனும் மதுபோதையில் அங்கு வந்துள்ளார்.

இருவரும் அதே பகுதியில் உள்ள தரைமட்ட பாலம் அருகில் நின்று பேசி கொண்டு இருந்தனர். இருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வேல்முருகன் தான் கையில் வைத்திருந்த நாடகத்திற்கு பயன்படுத்தும் அரிவாளால் பேச்சிமுத்துவை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் தலை, கைகளில் பலத்த காயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். அங்கிருந்து வேல்முருகன் தப்பி ஓடிவிட்டார். 

அக்கம் பக்கத்தினர் பேச்சிமுத்துவை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற நிலையில் அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பேச்சி முத்துவின் தந்தை பழனி அளித்த புகாரின் பேரில், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த வேல்முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory