» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவரை கைது செய்ய எதிர்ப்பு: போலீசார் - வழக்கறிஞர்கள் வாக்குவாதம்!
வியாழன் 13, நவம்பர் 2025 8:21:43 PM (IST)
தூத்துக்குடி நீதிமன்றத்தில் பிசிஆர் வழக்கில் ஆஜராக வந்தவரை காவல் துறையினர் வேறொரு வழக்கில் கைது செய்ய முயன்றனர். இதனால் வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமன். இவர் இன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் பிசிஆர் வழக்கு தொடர்பாக பிசிஆர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்துள்ளார். நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அவருக்கு வாய்தா போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேறொரு வழக்கு தொடர்பாக சிவராமனை காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபு என்பவர் கைது செய்ய முயற்சி செய்து இழுத்துச் செல்ல முயன்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து அங்கே காவல் துறையினர் மற்றும் வழக்கறிஞர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நகர துணை கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான ஏராளமான காவல்துறையினர் நீதிமன்ற வளாகத்தில் சிவராமனை கைது செய்வதற்காக இன்று தூத்துக்குடி நீதிமன்ற வவளாகத்திற்கு வந்தனர். நீதிமன்ற வளாகத்தில் வைத்து சிவராமனை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ளே வந்து யாரையும் கைது செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதை தொடர்ந்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வயல் வேலைக்குச் சென்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழப்பு
புதன் 10, டிசம்பர் 2025 11:03:21 AM (IST)

பைக் நிலை தடுமாறி விழுந்ததில் துறைமுக தொழிலாளர் பரிதாப சாவு
புதன் 10, டிசம்பர் 2025 10:54:35 AM (IST)

தூத்துக்குடியில் தெரு நாய்கள் கடித்து மக்கள் பாதிப்பு : மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
புதன் 10, டிசம்பர் 2025 10:00:34 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாதம் பூஜைகள் : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 8:39:31 AM (IST)

கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை: அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு!!
புதன் 10, டிசம்பர் 2025 8:34:30 AM (IST)

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேருக்கு 4 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 10, டிசம்பர் 2025 8:32:02 AM (IST)










